Asia cup 2022: என்ன நடந்தது?? பாகிஸ்தானை அடித்து இலங்கை அணி அபரா வெற்றி!! கொண்டாடும் ரசிகர்கள்..



asia-cup-2022-super-4-final-srilanka-won-pakistan

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆசியக்கோப்பை 2022 இறுதி போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டநிலையில், இறுதி போட்டிக்கு முன்பாக சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் மாற்று இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

Pak vs Sri

தொடக்கம் முதல் இலங்கை அணி வீரர்கள் அபாரமாக பந்துவீசினார். இதனால் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் 30 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்களுக்கு ஆரம்பத்திலையே அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், 2 ரன்களுக்கு 2 விக்கெட் விழுந்தநிலையில், இலங்கை அணியின் வெற்றி கேள்விக்குறியானது. அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரங்களில் ஆட்டம் இழக்க, பதும் நிசாங்கா நிதாமனமாக ஆடி அணியை வெற்றிபெற செய்தார்.

Pak vs Sri

17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 124 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இரண்டு அணிகளும் நாளை இறுதி போட்டியில் மோத உள்ள நிலையில் இந்த வெற்றி இலங்கை அணிக்கு பெரும் உத்வேகத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது.