ஜெபமாலையுடன் நிதியமைச்சர்.. திருமாவளவன் சொன்ன வார்த்தை.. திருச்சியில் விறுவிறுப்பு பேட்டி.!
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் பட்ஜெட் அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் என். மேரி வில்சன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது அவர் ஜெபமாலை அணிந்திருந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஜெபமாலையுடன் வந்தது நிதியமைச்சரின் தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு மட்டுமே. அதை தேவையற்ற அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

மத நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை, அந்த நம்பிக்கையை காரணமாகக் கொண்டு ஒருவரை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல. அதே நேரத்தில் அரசு அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள், மக்களின் நலன், பொருளாதார வளர்ச்சி மற்றும் மாநில முன்னேற்றம் போன்ற அம்சங்களே முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட நம்பிக்கைகள் குறித்து தேவையற்ற விவாதம் நடத்தக் கூடாது." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக ஆட்சி குறித்து வெளிப்படையாக போட்டு உடைத்த திருமாவளவன்...! செம ஷாக்கில் CM விஜய்!!!