அடிக்கு அடி தான் பதிலடி.....விஜய் உட்பட 108 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா? திமுக - அதிமுக வுக்கு செக் வைக்கும் விஜய்! தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பா? நொடிக்கு நொடி பரபரப்பு..!!!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட முடியாமல் அரசியல் முட்டுக்கட்டையில் சிக்கியுள்ளது. இதற்கிடையில் திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தகவலின்படி, திமுக மற்றும் அதிமுக இணைந்து 121 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நேரடி போட்டியாளர்களாக இருந்த இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் சேரலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ரகசிய டீல்....விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்..! அந்த ஒரு வார்த்தையால் நிம்மதியாக கிளம்பிய விஜய்!!!
ஒட்டுமொத்த ராஜினாமா முடிவா?
இந்த சூழலில், கூட்டணி ஆட்சியை தடுக்க தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 107 எம்.எல்.ஏக்களும் ஒரே நேரத்தில் பதவி விலகும் முடிவை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், இந்திய தேர்தல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒட்டுமொத்த ராஜினாமா நிகழ்வாக அமையும் என கூறப்படுகிறது.
முறைப்படி புதிய சட்டமன்றம் கூடாத நிலையில், ஆளுநரிடம் நேரடியாக ராஜினாமா கடிதங்கள் வழங்கப்பட்டால், அவர்கள் பதவியேற்காமலேயே விலகியவர்களாக கருதப்படலாம் என சட்ட நிபுணர்கள் விளக்குகின்றனர். இதனால் ஆளுநர் மாளிகை மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு புதிய சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘அரசியலமைப்பு நெருக்கடி’ ஏற்படும் வாய்ப்பு
108 இடங்கள் காலியாகும் சூழல் ஏற்பட்டால், சட்டமன்றத்தின் மொத்த பலம் 126 ஆகக் குறையும். அப்போது பெரும்பான்மை பலம் வெறும் 64 ஆக மாறும். இதனால் திமுக அல்லது அதிமுக தனித்தனியாகவோ, சிறு கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உருவாகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், மக்களின் தீர்ப்புக்குப் பிறகு உருவாகும் இத்தகைய அரசியல் மாற்றங்கள் பொதுமக்களிடையே எதிர்ப்பையும் அதிருப்தியையும் உருவாக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. குறிப்பாக, தேர்தலில் பெரும் ஆதரவு பெற்ற கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஒரே நேரத்தில் விலகுவது அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ஆட்சிக்கும் வாய்ப்பு?
அரசியல் குழப்பம் நீடித்தால், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சட்டப்பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யக்கூடும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
அவ்வாறு நடந்தால், சட்டமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டு அடுத்த ஆறு மாதங்களுக்குள் 108 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகும். இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதோடு, தமிழக அரசியலில் புதிய நிலைமாறுகளும் உருவாகலாம் என அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆப்பு வைத்தவரே அவர் தானா....? பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்! பின்னணியில் 'அந்த ' ஆள்பவர் ' யார்?..!!!