50 கோடி ரூபாய் வரை பேசப்பட்ட பேரம்... திமுக எம்எல்ஏ ராஜினாமா...! தமிழக அரசியலில் வெடித்த அடுத்த வெடிகுண்டு!!!
தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ள தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் பேச்சு, கட்சித் தலைவர் விஜய்க்கு அரசியல் ரீதியாக புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, கோவில்பட்டி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி காவல்துறையை அணுகியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு
கோவில்பட்டி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியை, கட்சித் தலைமை உத்தரவிட்டால் ராஜினாமா செய்ய வைப்போம் என்று பாலசுப்பிரமணியன் பேசியதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கருத்து பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்! விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்! காட்டமாக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!!
காவல்துறையில் புகார் அளித்த எம்.எல்.ஏ
இதையடுத்து, தன்னை ராஜினாமா செய்யும்படி தவெக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறி, திமுக எம்.எல்.ஏ கருணாநிதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக மீது அதிகரிக்கும் அரசியல் அழுத்தம்
ஏற்கனவே இரண்டு திமுக எம்.எல்.ஏக்களிடம் தலா 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக திமுக சார்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாலசுப்பிரமணியனின் பேச்சும், அதைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ள போலீஸ் புகாரும் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. இந்த விவகாரம் தவெகவுக்கும் அதன் தலைவர் விஜய்க்கும் அரசியல் ரீதியாக கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: அரசியலில் அடுத்த குண்டு.... செல்வப்பெருந்தகை பதவி ராஜினாமா? பாய்ந்து வந்த மாணிக்கம் தாகூர்.. வெடித்த பூகம்பத்தால் பரபரக்கும் தமிழக அரசியல்.!!!