75 ஆண்டுகால சரித்திரத்தை மாற்றிய CM விஜய்! சட்டப்பேரவையில் திமுக - அதிமுகவுக்கு வைத்த செக்.... தமிழக அரசியலில் அரிதான அந்த காட்சி..!!!



tn-assembly-session-dmk-aiadmk-opposition-history

புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது. அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மரபுப்படி ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டது.

ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு சட்டப்பேரவையில் உரையாற்றினார். புதிய அரசின் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அம்சங்கள் அவரது உரையில் இடம்பெற்றிருந்தன.

இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்! தவெக கூட்டணியில் இணையும் பெரிய கட்சி.... இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும் அதிகாரபூர்வ் அறிவிப்பு!! உற்றுநோக்கும் அரசியல் கலம்!!!

இதற்கிடையில், எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து அவைக்கு வந்தனர். மேலும், கட்சி நிர்வாகிகள் சிலர் சட்டப்பேரவைக்கு வெளியே பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தொடக்க நேரத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

அமைதியாக நடந்த ஆளுநர் உரை

புதிய அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர்களில் எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்புவது, வெளிநடப்பு செய்வது அல்லது ஆளுநர் உரையைப் புறக்கணிப்பது போன்ற நிகழ்வுகள் வழக்கமாக இடம்பெறும். ஆனால் இந்த முறை, அரசியல் போட்டி கடுமையாக இருந்தபோதிலும், ஆளுநர் உரை எந்தவித பெரிய அமளியும் இன்றி அமைதியான சூழலில் நடைபெற்றது கவனத்தை ஈர்த்தது.

இதனால், சட்டப்பேரவையின் தொடக்க நிகழ்வுகள் எதிர்பார்த்ததை விட சுமுகமான முறையில் நிறைவடைந்தன.

தமிழக அரசியலில் அரிதான காட்சி

இன்றைய கூட்டத்தொடரின் முக்கிய பேசுபொருளாக அமைந்த ஒன்று 75 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு புதிய திருப்பமாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சி வரிசையில்   அமர்ந்த காட்சிதான். கடந்த பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி செயல்பட்டு வந்த இந்த இரு பெரிய திராவிடக் கட்சிகள், ஒரே நேரத்தில் எதிர்க்கட்சி இருக்கைகளில் அமர்ந்திருப்பது அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய அதிகாரச் சமநிலை மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. புதிய அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் அடுத்தடுத்த கூட்டங்களில் எந்த வகையில் வெளிப்படும் என்பதிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: #சற்றுமுன் : விஜய் - காங்கிரஸ் கூட்டணி..... தவெகவுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு அறிவித்த காங்கிரஸ்...!!!