நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு! 14 முக்கிய துறைகளின் லிஸ்ட் ரெடி... முதல்வர் விஜய் காட்டும் அதிரடி ஆக்க்ஷன்....!!!
தமிழக அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் நிர்வாக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் காணொலிக் காட்சி மூலம் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியே அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
14 முக்கிய துறைகளின் செயல்பாடுகள் ஆய்வு
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், உள்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட 14 அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது. மாவட்டங்களில் நிலுவையில் உள்ள திட்டங்களின் தற்போதைய நிலை, நிதிப் பயன்பாடு மற்றும் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆட்சியர்களிடம் தலைமைச் செயலாளர் கேட்டறிய உள்ளார்.
இதையும் படிங்க: இனி இதுதான் ரூல்ஸ்.... உங்க இஷ்டத்துக்கு பேச கூடாது! அமைச்சர்களுக்கு செக் வைத்த CM விஜய்! அதிரும் தமிழக அரசியல்...!!!
மக்கள் நலத்திட்டங்கள் முதல் பருவமழை பணிகள் வரை
கள அளவில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்கிறதா என்பதிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது. பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றன.
வரவிருக்கும் பருவமழையை கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், சாலை பராமரிப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை விரைந்து முடிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மழைக்காலத்துக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளின் நிலவரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்
மாவட்ட வாரியாக அனைத்துத் துறைகளின் கள நிலவரங்களையும் ஆய்வு செய்த பிறகு, அதன் அடிப்படையில் விரிவான ஆய்வு அறிக்கை ஒன்றை தலைமைச் செயலாளர் தயாரிக்க உள்ளார். அந்த அறிக்கை முதல்வர் விஜய்யிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் தேக்கமடைந்த பணிகளை விரைவுபடுத்துவதற்கான அடுத்தகட்ட நிர்வாக உத்தரவுகள் மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் குறித்து அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டம் தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.