"மானம்கெட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்.!" அதிமுக ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு... வைரல்.!
மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் பேச்சு, தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதலமைச்சர் விஜயை விமர்சித்து அவர் பேசியதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.பி. உதயகுமார், “அதிமுகவை கேள்வி கேட்க வேண்டுமென்றால், முதலில் அதிமுகவில் உறுப்பினராக இருக்க வேண்டும். அல்லது அதிமுக உறுப்பினருக்கு பிறந்தவராக இருக்க வேண்டும்” என்று கூறியதாக வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், அதிமுகவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசியல் பங்களிப்பு குறித்து பேசிய அவர், வெளியில் இருந்து தொடர்ந்து விமர்சனம் செய்வது ஏற்றதல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
"அதிமுகவை சொந்தம் கொண்டாட வேண்டும் என்றால் அதிமுக தொண்டராக இருக்க வேண்டும், அதிமுக தொண்டர்களின் பிள்ளையாக இருக்க வேண்டும்"
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 15, 2026
முதல்வர் விஜய் மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்
Madurai | AIADMK | RBUdhayakumar | CMVijay | TVK#Newstamil24x7 #PoliticalNews pic.twitter.com/EsMvIt56Cd
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜயை விமர்சித்த அவர், நிகழ்ச்சியில் சில கடுமையான தனிப்பட்ட கருத்துகளையும் முன்வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: கடவுளே... காப்பாத்து! எத்தன்னை தடைகள் வந்தாலும் என் தலைவன் முதல்வர் ஆகணும்.! விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத தவெக தொண்டரின் வீடியோ!!!
தமிழகத்தில் அரசியல் சூழல் தொடர்ந்து சூடு பிடித்து வரும் நிலையில், முக்கிய கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போரும் தீவிரமடைந்துள்ளது. அந்தச் சூழலில் ஆர்.பி. உதயகுமாரின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தவெக கட்சி அதிமுகவின் எதிரி இல்ல.... அதிமுகவின் உண்மையான எதிரி திமுகதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி அரசியல் பேச்சு..!!!!