அதிருப்தியில் ரசிகர்கள்; ஆறுதல் அளிக்க ரஜினி வெளியிட்ட புதிய அறிக்கை

அதிருப்தியில் ரசிகர்கள்; ஆறுதல் அளிக்க ரஜினி வெளியிட்ட புதிய அறிக்கை



Rajini new statement

ரஜினி எப்போது அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர். அவரின் காலதாமதம் பலரை எரிச்சலடைய செய்திருக்கிறது. மேலும் மாவட்ட வாரியாகவும் முக்கியப்பொறுப்புகளில் உள்ளவர்களும் ரஜினியின் நீண்டகால ரசிகர்கள் இல்லை எனவும் கூறப்பட்டு வந்தது.

இத்தகையக் கருத்துகளால் எரிச்சலடைந்த ரஜினி அவதூறுகளுக்கு மறுப்புத் தெரிவித்து 2 நாட்களுக்கு முன்னால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Rajini new statement

அதில் ‘இந்த நடவடிக்கைகள் அனைத்தும் என் ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்பட்டன. 30, 40 வருடங்கள்  ஒருவர் ரசிகராக இருப்பதாலேயே ஒருவர் பதவிக்கும், அரசியலுக்கும் தகுதியானாராக இருப்பார் என சொல்ல முடியாது. ரசிகர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலில் வெல்ல முடியாது . மக்கள் செல்வாக்கும் வேண்டும். அப்போதுதான் வெற்றிப் பெற முடியும்’ என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ரசிகர்கள் பலர் அதிருப்தி அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கும் வகையில் இன்று ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினி. இதில் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரசிகர்களை மீண்டும் மன்றத்தில் சேர்ப்பது குறித்தும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்து ரஜினி தன் அறிக்கையில் வெளியிட்டிருப்பதாவது:

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி  நான் கூறியது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மை நியாயமானதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. மன்ற செயல்பாடுகள் குறித்து உண்மைகள் தான் கூறியிருந்தேன். என்னையும் உங்களையும் யாராலும் எந்தக் சக்தியாலும் பிரிக்க முடியாது.நான் எந்த பாதையில் சென்றாலும் அந்தப்பாதை நியாயமானதாக இருக்கும்  உங்களைப்போன்ற ரசிகர்களை கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். நாம் எந்த பாதையில் சென்றாலும் அந்தப்பாதை  நியாயமானதாக இருக்கட்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.