இன்னும் சற்று நேரத்தில்.... இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கில் போட்டி?. அறிவிக்கிறார் ராகவா லாரன்ஸ்...! அதிரும் அரசியல் களம்!!!
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியல் வருகையை அண்மையில் உறுதி செய்த நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அவர் போட்டியிடுவார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பரவி வரும் தகவல்கள் குறித்து இன்று முக்கிய விளக்கம் அளிக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இன்று மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு
இதுதொடர்பாக தனது X சமூக வலைத்தளப் பதிவில், சமீபத்தில் நடைபெற்ற தனது பத்திரிகையாளர் சந்திப்பு குறித்தும், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பரவி வரும் தகவல்கள் குறித்தும் இன்று பிற்பகல் 12 மணிக்கு விரிவாக விளக்கமளிக்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பால் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தவெக-லாரன்ஸ் இணைப்பு குறித்து பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயுடன் ராகவா லாரன்ஸுக்கு நீண்டகால நட்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது அரசியல் நகர்வுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. இதனால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த இறுதி நிலைப்பாடு இன்று வெளியாகும் அவரது விளக்கத்திற்குப் பிறகே தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: மனஉளைச்சலில் உள்ளதால் அரசியல் அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்! அவரே வெளியிட்ட பதிவு ...!!!