மக்களுக்காக முழங்காலிட்டு தலைவணங்கிய பிரதமர் மோடி! இதுவரை காணாத காட்சி.... மெய்சிலிர்த்து போன தொண்டர்கள்.. வைரலாகும் வீடியோ!!!
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சுவேந்து அதிகாரியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நிகழ்ச்சியின் போது மக்கள் முன்பாக கைகூப்பி, முழங்காலிட்டு தலைவணங்கிய அவரது செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியல் வட்டாரங்களிலும் இந்த காட்சி பேசுபொருளாக மாறியுள்ளது.
மக்கள் முன் பணிவுடன் நடந்துகொண்ட மோடி
விழா மேடையில் பொதுமக்கள் நோக்கி பிரதமர் மோடி மரியாதை செலுத்திய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. உயரிய பதவியில் இருந்தாலும், மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் அவர் காட்டிய மரியாதையை இந்த செயல் வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தகவலின்படி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த தருணம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேடையில் இருந்த அரசியல் நிர்வாகிகளும் அந்த தருணத்தை கவனமாக பார்த்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜக விவசாயி மாநாட்டில் வள்ளி கும்மி நடனமாடி குத்தாட்டம் போட்ட குஷ்பூ! கலக்கல் வீடியோ வைரல்!
சமூக வலைதளங்களில் வைரலான காட்சி
இந்த புகைப்படத்தை மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக சுவேந்து அதிகாரி ஆதரவாளர்கள் இந்த நிகழ்வை பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.
அரசியலில் கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய பணிவான அணுகுமுறை மக்களிடையே வேறுபட்ட கவனத்தை பெற்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அரசியல் வட்டாரங்களில் பேசுபொருள்
பொதுமக்கள் முன் பிரதமர் மோடி காட்டிய இந்த நடத்தை தற்போது தேசிய அரசியல் அளவிலும் விவாதிக்கப்படுகிறது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு சின்னமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
I bow to West Bengal’s Jana Shakti!
The people’s blessings are the truest strength of democracy and the noblest source of public resolve. pic.twitter.com/y5oAp7mbez
— Narendra Modi (@narendramodi) May 9, 2026