850 தொகுதிகள் என்றால் ஒரு MP-க்கு 96 நிமிடங்கள் தானா? இதில் 10 கோடி செலவு! மனோ தங்கராஜின் பகீர் கணக்கால் அதிர்ச்சியில் அரசியல் களம்!!!
தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் அரசியல் களத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் எழுப்பியுள்ள கேள்வி கவனம் பெற்றுள்ளது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், ஒவ்வொரு எம்.பி.க்கும் கிடைக்கும் பேசும் நேரம் எவ்வளவு இருக்கும் என்பதையே அவர் தனது பதிவில் கேள்வியாக முன்வைத்துள்ளார்.
ஆண்டுக்கு 274 மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றம்?
எக்ஸ் தளத்தில் மனோ தங்கராஜ் வெளியிட்ட பதிவில், 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நாடாளுமன்றம் ஆண்டுக்கு சராசரியாக 274 மணி நேரம் மட்டுமே செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தரவின் அடிப்படையில், எதிர்காலத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தால், உறுப்பினர்களுக்கு கிடைக்கும் விவாத நேரம் மேலும் குறையக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: அதிர்ச்சி! முதல்வர் விஜய்கு எதிராக ஸ்டாலின்- எடப்பாடி போட்ட சீக்ரெட் பிளான்? தமிழக அரசியலில் பரபரப்பு...!!!
850 தொகுதிகள் என்றால் எம்.பி.க்கு 96 நிமிடங்களா?
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட்டால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 5 ஆண்டு காலத்தில் பேசுவதற்கு சுமார் 96 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும் என மனோ தங்கராஜ் கணக்கிட்டுள்ளார். அதாவது, ஒரு எம்.பி. தனது தொகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கான நேரம் மிகவும் குறைவாகிவிடும் என்பதே அவரது வாதமாக உள்ளது.
ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடி செலவா?
இதனுடன் தேர்தல் ஆணையத்தின் செலவுகள் மற்றும் ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவு உள்ளிட்டவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்ட அவர், ஒரு தொகுதியை உருவாக்கி பராமரிக்க சுமார் ரூ.10 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் வெறும் 96 நிமிடங்கள் மட்டுமே மக்கள் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க ஒரு தொகுதிக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிட வேண்டுமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மனோ தங்கராஜின் இந்த கணக்கீடும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்ற கருத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நேரம் குறையும் என்ற கேள்வியையும் இணைத்து அவர் விவாதத்தை முன்னெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லா பக்கமும் சுத்தி வளைக்கும் விஜய்! ஸ்டாலினுக்கு ஒரே கூட்டத்தில் வைத்த செக்..... அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!