#சற்றுமுன் : விஜயின் ஆபத்தான முடிவால்.. டென்ஷனான செங்கோட்டையன்.?! நெருக்கடிக்கு நடுவில் மேலும் ஒரு குடைச்சல்.. தேவையா.?! 



ka sengottaiyan may angry with tvk vijays decision

யாரும் எதிர்பாராத அளவிற்கு தமிழகத்தில் த.வெ.க 108 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. திமுகவோ, அதிமுகவோ ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, கவர்னருக்கு முன்பாக இருக்கும் ஒரே வாய்ப்பு த.வெ.கவை ஆட்சி அமைக்க அழைப்பதுதான்.

அத்துடன், தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்து கொடுப்பதுதான் தற்போதைய சூழலில் சாத்தியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இந்த பெரும்பான்மையை த.வெ.க நிரூபிக்க தவறினால், மறு தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.

vijay

ஏற்கனவே, த.வெ.க 108 இடங்களை பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு தேவைப்படுவது வெறும் 10 இடங்களே.! ஆனால், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தற்போது அவர்களுக்கே சிக்கலாக மாறியுள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.கவுக்கு 11 இடங்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கே “தண்ணி” காட்டிய திமுக நிர்வாகிகள்..? தோல்வியை நோக்கி நடைபோடும் கழகம்.? கடும் கோபத்தில் மு.க. ஸ்டாலின்..?!

இந்த நிலை தேவையற்ற சிக்கலை உருவாக்கியுள்ளது என்பதால், இது மூத்தத்தலைவர் செங்கோட்டையன்க்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. ஏற்கனவே, 10 எம்எல்ஏக்கள் தொடர்பான முடிவில் நெருக்கடியில் இருக்கும் நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏவை பெற வேண்டிய சூழல் அவரை கடும் பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.

இதையும் படிங்க: "இப்பவும் ஒன்னும் கெட்டு போகல".. ராகுல் காந்தி போட்ட பக்கா ஸ்கெட்ச்.!