தவெகவில் இணைய முயன்ற திமுக MLA? கட்சி தலைமை எடுத்த அவசர பேச்சுவார்த்தை! கடைசி நேரத்தில் மாறிய முடிவு!!!
ராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக் குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்ததாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கட்சித் தலைமையின் நேரடி தலையீட்டுக்குப் பிறகு அவர் தனது முடிவை மாற்றி, திமுகவிலேயே தொடர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் செலவுகள் குறித்து அதிருப்தி
தகவலின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட செலவுகளால் தனக்கு பெருமளவில் கடன் சுமை ஏற்பட்டதாகவும், அதற்கு கட்சித் தலைமையே காரணம் என்றும் அசோக் குமார் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் மாற்றுக் கட்சிக்கு செல்லும் முடிவை எடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதையும் படிங்க: விரைவில் தவெக-வில் இணையும் யுவராஜா..! ஆட்டம் காணும் அரசியல் களம்..!!!
கட்சித் தலைமையின் அவசர பேச்சுவார்த்தை
இந்தத் தகவல் கட்சித் தலைமையை எட்டியதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டதாக கூறப்படுகிறது. அவரது அறிவுறுத்தலின் பேரில், தஞ்சை மாவட்டச் செயலாளரும் எம்.பி.யுமான முரசொலி உள்ளிட்டோர் அசோக் குமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசி நேரத்தில் மாறிய முடிவு
இதையடுத்து நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் கட்சித் தலைமையிடம் இருந்து அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சில முக்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், அசோக் குமார் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையாமல் திமுகவிலேயே தொடர அவர் சம்மதித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.