சண்முகத்தின் ஆட்டத்தை ஒரே வார்த்தையில் அடக்கிய எடப்பாடி! அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட மூத்த புள்ளி.... பரபரப்பில் தமிழக அரசியல்!!!
அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் மூத்த தலைவர் மற்றும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் பெயர் இடம்பெறாதது கட்சிக்குள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், நீண்ட காலமாக கட்சியில் முக்கிய பங்காற்றி வந்த சி.வி.சண்முகம் பட்டியலில் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள்
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையைச் சுற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமரசப்படுத்தும் முயற்சியாக மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட புதிய பட்டியலில் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன.
இதையும் படிங்க: BREAKING: திடீர் ட்விஸ்ட்! அதிமுகவில் இணைந்தனர்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!
சி.வி.சண்முகம் ஏன் புறக்கணிக்கப்பட்டார்?
ஜெயலலிதா தலைமைக் காலம் முதல் விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய முகமாக இருந்து வந்த சி.வி.சண்முகத்திற்கு எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படாதது பேசுபொருளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி உடனான கட்சி முடிவுகள் மற்றும் கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தலைமை எடுத்த முடிவு
தன்னிடம் இருந்து நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், முதலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்; பதவிகள் குறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்ற நிலைப்பாட்டை கட்சி தலைமை எடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அவர் எந்த முக்கிய நிர்வாகப் பொறுப்பும் இன்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: முடிந்தது சமரச பேச்சுவார்த்தை... விஜய் அரசுக்கு விழுந்த முதல் இடி! வேலுமணி செய்த தரமான சம்பவம்! தமிழக அரசியலில் அதிரடி ட்விஸ்ட்..!!!