அடுத்த சீன் இதுதானா? டாக்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிறக்கடிக்க ஆசை மீனா!
பாஜக அமர்பிரசாத் ரெட்டிக்கு எதிரான புகாரில் அதிர்ச்சி திருப்பம்; திமுகவின் அரசியல் சதி?.. பகீர் தகவல்.!

2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான எதிர்கால வியூகத்துடன் கட்சிகள் தங்களின் காய்நகர்த்தலை தொடங்கி இருக்கிறது. ஆளும் கட்சிகள் முதற்கட்டமாக எதிர்கட்சியினரை வழக்கில் சிக்கவைக்கவும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை வழங்கினார். அந்த புகாரில், "சென்னையில் உள்ள தியாகராஜ நகர், அடையார், அண்ணா நகர் பகுதிகளில் ஒன் ஸ்டிச் (One Stich Shop) என்ற பெயரில் நவீன நாகரீக துணிக்கடை தொடங்கப்பட்டு, சோனியா ரவிக்குமார் என்பவரால் நடத்தப்பட்டு வந்தது.
இவருக்கு ஜெகன் என்பவரின் வாயிலாக மணிகண்டனின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் தி.நகரில் மேற்கூறிய துணிக்கடை ஆரம்பிக்க முதலீடு செய்து இருக்கிறார். இதற்காக ஆன்லைன் வாயிலாக பணமும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.7.5 இலட்சம் பணம் கொடுக்கப்பட்ட நிலையில், ரூ.50 இலட்சம், ரூ.40 இலட்சம் இரண்டு தவணையாக உட்கட்டமைப்பு செலவுகளுக்கும் மற்றும் பிற செலவுக்கு என ரூ.8 இலட்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.1.5 கோடி பணம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் வரையில் வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் பகுதியில் நடத்தி வரும் கிளைக்கும் பல உபகரணங்கள் வாங்கி ஜி.எஸ்.டி உட்பட பிற வரிகள் அனைத்தையும் செலுத்திய மணிகண்டன், ஒப்பந்தம் மேற்கொள்ள பலமுறை சோனியா ரவிக்குமாரை வற்புறுத்தியும் பலன் இல்லை. ஒருகட்டத்தில் நீ யார்? என கேட்ட சோனியா, உன்னிடம் பணம் வாங்கவில்லையே என கூறினார். முதலீடு செய்த எனக்கே தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் பேசுகிறார்.
சோனியா ரவிக்குமார் மற்றும் அவரின் தாய் தேவி சேர்ந்து கொலை மிரட்டல் விடுகிறார்கள். அவர்களின் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சோனியா, தேவி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களின் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி பலரிடம் பணமோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய சோனியாவின் தாய் தேவி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தன்னை தாக்கினார் என சமீபத்தில் குற்றசாட்டு முன்வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் சென்னை வந்தபோது வரவேற்பு அளிக்கச்சென்ற தனது சகோதரி ஆண்டாள் - மற்றொரு நிர்வாகி இடையே பணப்பிரச்சனை ஏற்பட்டதாகவும் தேவி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேவிக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கர்மா அனைத்து உண்மைகளையும் உணர்த்தும் என அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "திமுகவின் மோசடி முகங்கள், திமுகவின் ஆதரவு எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்காக கடவுளாலேயே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை என்மீது புகார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்தி, என்னை கைது செய்ய தனிப்படை அமைத்தது எதற்காக என்பதை மக்கள் இப்போது புரிந்துகொள்ளட்டும்" என கூறி இருக்கிறார்.
The fraudulent faces of DMK, backed by DMK MP @ThamizhachiTh, have been exposed by God himself.
— Amar Prasad Reddy (@amarprasadreddy) February 13, 2024
Now people will understand why Tamil Nadu Police registered a put up FIR against me, harassed my family members and also formed three special teams to arrest me.@tnpoliceoffl… pic.twitter.com/vH0tsg3uV8
தலைப்புப்படம்: அமர்பிரசாத் ரெட்டியின் எக்ஸ் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.