சொன்னா நம்ப மாட்டீங்க.. இதை குடிங்க கிட்னில இருக்குற ஸ்டோன் முழுவதும் கரைந்து உடனே வெளியேறிவிடும்..!

சொன்னா நம்ப மாட்டீங்க.. இதை குடிங்க கிட்னில இருக்குற ஸ்டோன் முழுவதும் கரைந்து உடனே வெளியேறிவிடும்..!



You won't believe it.. Drink this and all the stones in the kidney will dissolve and come out immediately..!

பொதுவாக சிறுநீரக கல் என்பது சிறுநீரகம் அல்லது சிறுநீரகப் பாதையில் அளவுக்கதிகமான யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் போன்ற  தாது உப்புக்கள் தேங்குவதால் உருவாகக்கூடிய ஒன்றாகும்.

 இந்த சிறுநீரக கற்கள் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களினாலும் மாறிவரும் வாழ்வியல் முறைகளாலும் மனித உடலில் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதில் சிறுநீரக கல் பிரச்சினை என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக மனித உடலில் உள்ள நச்சு கழிவுகளை அகற்றுவதில் சிறுநீரகம் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் இந்த சிறுநீரக உறுப்பில் கற்கள் உருவாகி அவை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு  நம்மை கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றன. இந்த சிறுநீரக கற்களை எளிதில் அகற்றக் கூடிய எளிய வழிமுறைகளை பின்வருமாறு பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

1) வெங்காயம்
2) பூண்டு
3) மிளகு
4) எலுமிச்சை சாறு
5) நாட்டு சக்கரை

செய்முறை:

1) ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் பாதி எலுமிச்சை பழத்தை மட்டும் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். 2) பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். 3) மேலும் அதில் இடித்த வெங்காயம் 2, இடித்த பூண்டு பல் 2, இடித்த கருப்பு மிளகு மிளகு 5 சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

4) பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வெறும் வயிற்றில் அதிகாலையில் பருகி வந்தால் நம் சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடும்.