"அவள் மீது எனக்கு கொள்ளை ஆசை; அதனால் தான் பலமுறை அப்படி செய்தேன்" சிறுமியை கர்ப்பமாக்கிய மாமாவின் வாக்குமூலம்!
"அவள் மீது எனக்கு கொள்ளை ஆசை; அதனால் தான் பலமுறை அப்படி செய்தேன்" சிறுமியை கர்ப்பமாக்கிய மாமாவின் வாக்குமூலம்!
சென்னையில் 17 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உறவுக்கார மாமா; பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாமா கைது.
சென்னை ஓட்டேரி, எஸ் எஸ் புரம் பகுதியை சேர்ந்த ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள் அந்த 17 வயது சிறுமி. வறுமையில் வாடும் தனது குடும்பத்திற்காக அவள் வீட்டு வேலைகள் செய்து சம்பாதித்து வருகிறாள்.
இந்நிலையில் சிறுமி சில நாட்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தச் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற மாமா உறவு முறை கொண்ட விஜயகுமார் என்பது தெரியவந்தது. இவர் சிறுமியின் அம்மாவுக்கு தம்பி முறை. அண்ணா சாலையில் வசித்து வரும் விஜயகுமார் ஒரு ஏசி மெக்கானிக். மாமா என்ற உரிமையில் இவர் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்துள்ளார். அப்போதுதான் சிறுமிக்கும் அந்த மாமாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் மீது கொள்ள ஆசை கொண்ட அந்த மாமா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதை அறியாத சிறுமியும் அதை வாங்கி குடித்து மயங்கி விட்டார். அந்த நேரத்தில் தான் விஜயகுமார் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு விட்டுவிடாமல் அதை தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
அதன் பிறகு வீட்டிற்கு வரும் சமயங்களில் எல்லாம் அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இப்படியே மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்த மாமாவை பற்றி வெளியில் சொல்ல சிறுமிக்கு தைரியம் இல்லை. இந்நிலையில்தான் சிறுமி மயக்கமடைந்து கர்ப்பமாக்கிய சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் விஜயகுமாரை வரவழைத்து அடித்து துவைத்தனர். மேலும் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்து விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் அவர் வீடியோவை வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் விஜயகுமார் இதைப்பற்றி கூறும்போது, "சிறுமி மீது எனக்கு கொள்ளை ஆசை. அதனால்தான் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை கற்பழித்தேன்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.