கீர்த்தி சுரேஷின் நாய் என்ன காரியம் செய்து பாருங்க ! அவரே வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரல்...
இந்த நாட்களில் மட்டும் நகம் வெட்ட கூடாதாம்! வெட்டினால் ஏற்படும் விளைவுகள்! சாஸ்திரம் சொல்லும் உண்மை என்ன?

உடல்நலத்துக்கும் ஆன்மிக நலனுக்கும் இடையில் ஒரு பாலம் போலவே, நகங்களை வெட்டுவது போன்ற ஒரு சாதாரண செயலும், சாஸ்திர ரீதியாக சில விதிமுறைகளை கடைபிடிக்ககிறது.
நம் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவது ஒரு காரணம் உண்டு. பலருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாததால், 'எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்' என்ற எண்ணத்தோடு பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால், சில செயல்களுக்கு, குறிப்பாக நகம் வெட்டுவது போன்றவை, சாஸ்திர ரீதியாக சில முக்கியமான விதிகள் கூறப்பட்டுள்ளன.
நகம் வெட்டுவது என்பது சுகாதார ரீதியாகவும், ஒழுங்கான தோற்றத்திற்கும் அவசியமானது. ஆனால், அதை எந்த நாளில் செய்வது? எப்போது தவிர்க்க வேண்டும்? என்பதில் ஜோதிடம் மற்றும் சாஸ்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் வீட்டில் பெரியவர்கள் நகங்களை வெட்டக்கூடாத நாள்கள் குறித்து எச்சரிக்கையாக கூறுவது இந்தச் சாஸ்திர மரபுக்கே உரியதாகும்.
இதையும் படிங்க: காலையில் எழுந்ததும் இந்த 2 பொருட்களை தொட்டால் வீட்டில் பணம் பெருகுமாம்! இதை மட்டும் எழுந்தவுடன் தொடவே கூடாதாம்! இனி தெரிஞ்சுகோங்க...
❌ நகங்களை வெட்டக்கூடாத நாட்கள்:
1. செவ்வாய் கிழமை
இந்த நாளில் நகங்களை வெட்டினால் கடன் பிரச்சனைகள் மற்றும் நிதி இழப்புகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. அனுமனுக்குரிய நாளாகவும் கருதப்படுவதால், ஆன்மிக ரீதியாகவும் இதனை தவிர்க்கவேண்டும்.
2. வியாழக்கிழமை
திருமண உறவுகளில் உடன்பாடு குறைபாடு, கணவன்-மனைவி இடையே தூரம் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த நாளில் நகங்களை வெட்டக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது.
3. சனிக்கிழமை
சனி கிரகத்தால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உடல்நல குறைகள் கூட வாய்ப்புள்ளது. இதனால் நிதி இழப்புகளும் ஏற்படலாம்.
4. ஞாயிற்றுக்கிழமை
வேலை தொடர்பான தடைகள் ஏற்படலாம். தன்னம்பிக்கையைக் குறைக்கும் என்றும், வெற்றி தடைபடும் என்றும் ஐதீகமாக நம்பப்படுகிறது.
✅ நகங்களை வெட்ட ஏற்ற நாட்கள்:
1. திங்கள் கிழமை
இந்நாளில் நகங்களை வெட்டுவது அறியாமையிலிருந்து விடுதலை, பாவ நிவாரணம் ஆகியவற்றைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. சிவன் மற்றும் சந்திரனுடன் இந்நாள் தொடர்புடையதாகும்.
2. புதன் கிழமை
மங்களகரமான நாள். நிதி நன்மைகள், தொழிலில் வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றுக்கேற்ற நாள்.
3. வெள்ளி கிழமை
லட்சுமி தேவியைப் பிரியப்படுத்தும் நாள். நகங்களை வெட்டினால் செல்வம், அழகு மற்றும் செழிப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
ஒரு செயலைச் செய்யும் நேரமும் நாளும் அதன் பலன்களை நிர்ணயிக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. நகங்களை வெட்டுவது போன்ற ஒரு செயல்கூட, ஆன்மிக ரீதியாக பலன்களை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. நம்மில் பலர் இதைப் பழக்கமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அதில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, இந்த சாஸ்திர ரீதியான வழிமுறைகள் வாழ்க்கையில் சிறப்பை கூட்டும்.
இதையும் படிங்க: காலையில் எழுந்ததும் இந்த 2 பொருட்களை தொட்டால் வீட்டில் பணம் பெருகுமாம்! இதை மட்டும் எழுந்தவுடன் தொடவே கூடாதாம்! இனி தெரிஞ்சுகோங்க...