இப்படியும் ஒரு காதல் திருமணமா? வியக்கவைக்கும் புது ஜோடி; குவிந்து வரும் பாராட்டு.!
இப்படியும் ஒரு காதல் திருமணமா? வியக்கவைக்கும் புது ஜோடி; குவிந்து வரும் பாராட்டு.!
பாலினம் மாறி தன் காதலியை கரம்பிடித்த காதலனின் துணிச்சலை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
மேற்குவங்க மாநில மோய்னகுடி பகுதியைச் சேர்ந்தவர் சக்னிக் சக்ரபோர்தி. சவுத் தினஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிக் தத்தா. இவர்கள் இருவரும் கொல்கத்தாவில் நடைபெற்ற மாடலிங் போட்டியின்போது முதன்முதலாக சந்தித்துக்கொண்டனர்.
அதன்பிறகு அவர்களின் நட்பு நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில் திடீரென்று காதலாக மாறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதனை அறிந்த இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனெனில் இருவரும் வேறு வேறு சாதியோ மதமோ கிடையாது ஆனால் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் என்பதே அவர்களது அதிர்ச்சிக்கு காரணம். தங்களது காதலை யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது.
மேலும், திருமணத்திற்கு இரு வீட்டாரையும் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு அனிக் தத்தா ஆணாக மாறினார். பிறகு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிறைவேறியுள்ளது.
காதலுக்காக பாலினம் மாறி திருமணம் செய்துகொண்ட அந்த புது ஜோடிகளை திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.