42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கும் கருப்பு உளுந்து வடை.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!!
![How to Prepare Karupu Uluntha Vadai](https://cdn.tamilspark.com/large/large_vada-52133.jpg)
இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்த கருப்பு உளுந்து வடை எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புசத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதால் ரத்தசோகை நோய் வராமல் தடுக்க இயலும்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவைக்கேற்ப கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
கருப்பு உளுந்து - 1 கப்
மிளகு - 2தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை :
★முதலில் கருப்பு உளுந்தை வெறும் வாணலியில் நன்றாக வறுக்க வேண்டும்.
★பின் மிக்ஸியில் ரவை போன்று கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அதனுடன் துருவிய இஞ்சி, மிளகுபொடி, கருவேப்பிலை, வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
★பின் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
★இறுதியாக இதனை 15 நிமிடங்கள் ஊறவைத்து வடையாக தட்டி ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பொரித்து எடுத்தால் சுவையான கருப்பு உளுந்து வடை தயாராகிவிடும்.