சொல்ல வார்த்தைகள் இல்லை.! கணவர் சுந்தர். சியின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ!
சமைப்பதில் இப்படியெல்லாம் தவறு செய்பவர்களா நீங்கள்? இனி கவலைப்பட வேண்டாம் ! உங்களுக்கான டிப்ஸ் இதோ...

சமையலறையில் தினமும் சமைக்கும் போது, சில நேரங்களில் நம்மால் அறியாமல் சில தவறுகள் நடந்து விடுகின்றன. ஆனால் அவற்றை சரிசெய்ய சில எளிய வழிகள் உள்ளன. இங்கே அதைப் பற்றிய சில பயனுள்ள டிப்ஸ்கள்:
1. இட்லி மாவு கெட்டியாகிவிட்டதா?
உளுந்து போதாமல் இட்லி மாவு கெட்டியாக இருந்தால், பச்சை அப்பளங்களை சிறிது தண்ணீரில் நனையவைத்து, மிக்ஸியில் அரைத்து மாவுடன் கலக்குங்கள். இப்படி செய்தால் இட்லி மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
2. உருளைக்கிழங்கு மாவுபோல் வெந்து விட்டதா?
உருளைக்கிழங்கு அதிகமாக வேகி விட்டால், அதன்மேல் சிறிது பால் பவுடர் தூவி வையுங்கள். சில நிமிடங்களில் கிழங்கு கெட்டிப்பட்டுவிடும்.
இதையும் படிங்க: இந்த 3 ராசி பெண்களிடம் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணுமாம்! முழு விபரம் உள்ளே...
3. சப்பாத்தி மாவு அதிகமாக நனைந்துவிட்டதா?
சொத சொத என்று சப்பாத்தி மாவு பிசைந்து விட்டால், கவலைப்பட வேண்டாம். அந்த மாவை அரைமணி நேரம் ஃப்ரீசரில் வைத்து பிறகு எடுத்து உருட்டி சப்பாத்தி செய்தால் நன்றாக இருக்கும்.
4. மாவு போதாமையால் சப்பாத்தி செய்ய முடியவில்லையா?
கோதுமை அல்லது மைதா மாவு போதாமல் இருந்தால், வேகவைத்த உருளைக்கிழங்கை பிசைந்து, அந்த மாவுடன் சேர்த்து பிசையுங்கள். இதனால் பூரி, சப்பாத்தி நன்றாக வரும்.
5. சாம்பாரில் உப்பு கூடிவிட்டதா?
சாம்பாரில் உப்பு அதிகமாக இருந்தால், ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி, சாம்பாரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இது உப்பின் தாக்கத்தை குறைக்கும்.
இதையும் படிங்க: பாலியல் உணர்வை தூண்டும் பூண்டு.. தம்பதிகள் ஜமாயுங்க!