BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
எருமையை குளிப்பாட்டிய நேரத்தில் 13 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை! சிறுவனை வாயில் கவ்வி இழுத்து செல்லும் திடுக்கிடும் வீடியோ காட்சி...
காக்ரா ஆற்றில் நடந்த ஒரு கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை உலுக்கியது. சனௌலி கிராமத்தில், 13 வயது சிறுவன் ஒருவர் எருமையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, முதலை தாக்கி உயிரை காவு கொண்டது.
ஆற்றில் நடந்த திடீர் தாக்குதல்
அந்த சிறுவன் 8ம் வகுப்பில் கல்வி பயின்று வந்தார். சம்பவம் நடந்தபோது, அவர் ஆற்றின் கரையில் நின்றிருந்தார். அந்த நேரத்தில், திடீரென நீரிலிருந்து ஒரு முதலை வெளிவந்து, சிறுவனின் கால்களை தாடையால் பிடித்து இழுத்தது.
பின்னர், கழுத்தையும் கடித்துக்கொண்டு ஆழமாக தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. அருகில் இருந்தவர்கள் அலறியும் கத்தியும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
இதையும் படிங்க: 11 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்ட பயங்கரம்.! தந்தையின் கண்ணீரால் நனைந்த சாலை! சோகத்தில் முடிந்த திருமண ஊர்வலம்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
இந்த பயங்கர சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், முதலை சிறுவனை இழுத்துச் செல்லும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள்
வனத்துறையும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிறுவனின் உடலை மீட்கும் பணி தொடருகிறது. கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
उत्तर प्रदेश –
जिला गोंडा में घाघरा नदी किनारे भैंस नहलाने गए 13 वर्षीय राजा बाबू उर्फ नान यादव को मगरमच्छ खींचकर ले गया। एक Video में मगरमच्छ और बच्चे का सिर मामूली दिखता है। फिर दोनों लापता हो जाते हैं। कल से तलाश जारी है। pic.twitter.com/Bqi3RzXAJo
— Sachin Gupta (@SachinGuptaUP) June 23, 2025
இதையும் படிங்க: இது புதுசா இருக்கே.. திருடருக்கே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய குடியிருப்பாளர்கள்! வைரலாகும் வீடியோ...