7 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துண்டு துண்டாக வெட்டிய கொடூர இளைஞர்!

7 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துண்டு துண்டாக வெட்டிய கொடூர இளைஞர்!



Young man harassment to girl and killed in madhya Pradesh

மத்தியபிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள ஜுன்னார்தேவ் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 7 வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. இதில் குழந்தையின் பெற்றோர் கரும்பு தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெண்ணின் அண்ணன் மகனான சோனு என்ற 17 வயது இளைஞர் வீட்டிற்கு வந்துள்ளார்.

Madhya pradesh

இந்த நிலையில் சிறுமியின் தாயார் வழக்கம்போல் கரும்பு தோட்டத்தில் அறுவடை செய்வதற்காக சென்றுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட சோனு, சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். இதில் சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சோனு சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும், சிறுமியை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி அங்கிருந்த மரக்கட்டைகளுடன் மறைத்து வைத்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து விடு திரும்பிய பெற்றோர் தனது மகள் காணாததால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே சோனு மறைத்து வைத்திருந்த சிறுமியின் உடலை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் புதைத்து விட்டு தலைமுறைவாகியுள்ளார். சிறுமியின் தாயாருக்கு சோனவின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசாரிடம் சோனுவை பற்றி கூறியுள்ளார்.

Madhya pradesh

இதனையடுத்து சோனுவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சோனு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறுமியை புதைத்த இடத்தையும் காட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.