ஒருநாள் கூட அவர் அப்படி இருந்தது இல்லை.. தாலியையும் அறுத்துவிட்டார்.! தற்கொலை செய்த மனைவியின் ஷாக் லெட்டர்.!

ஒருநாள் கூட அவர் அப்படி இருந்தது இல்லை.. தாலியையும் அறுத்துவிட்டார்.! தற்கொலை செய்த மனைவியின் ஷாக் லெட்டர்.!



Wife suicide for husband torture

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கும் வழக்கறிஞரான கண்ணன் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், ஐஸ்வர்யா திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,  ஐஸ்வர்யா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், எனது கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். என்னிடம் மோசமாக நடந்துகொள்வார். அவர் என்னை ஒருநாள் கூட அன்பாக நடத்தியதே இல்லை. என்னை மோசமாக கொடுமைப்படுத்துவார்.

என் தாலியையும் அறுத்துவிட்டார். என் சம்பள பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு செலவிற்கு கூட பணம் தர மாட்டார். அவர் தான் என் மரணத்திற்கு காரணம் என எழுதியுள்ளார். இதனையடுத்து கணவர் கண்ணன் நாயரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.