முதல் புருஷனுக்கு பொறந்த பொண்ணு மேல ரெண்டாவது புருஷனுக்கு கண்ணு.! கடும் கோவத்தில் மனைவி செய்த செயல்.!

முதல் புருஷனுக்கு பொறந்த பொண்ணு மேல ரெண்டாவது புருஷனுக்கு கண்ணு.! கடும் கோவத்தில் மனைவி செய்த செயல்.!


wife-killed-her-husband

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சேர்ந்த நவுஷீன் பேகம் என்ற பெண்ணிற்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நவுஷீன் பேகம் தனது கணவருடன் விவாகரத்து செய்துவிட்டு, தனது பருவ வயது பெண் உட்பட 5 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த வருடம் ககன்தீப் அகர்வால் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் நவுஷீன் பேகம். ககன்தீப்க்கும் இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ககன்தீப் திடீரென்று மாயமானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, நவ்ஷீன் பேகமும்  ககன்தீப்துடன் வசித்து வந்த வீட்டை பூட்டிவிட்டு, அவரது தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நவ்ஷீன் பேகத்திடம் போலீசார் விசாரித்துள்ளனர்.

Wife

ஆரம்பத்தில் மறுத்துவந்த நவுஷீன் பேகம் ஒருகட்டத்தில் தமது கணவரை 6 ஆம் தேதி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். நவுஷீன் பேகத்தின் நண்பரான சுனில் என்பவரின் உதவியுடன் ககன்தீப்பை கொலை செய்து வீட்டு தோட்டத்திலேயே சடலத்தை புதைத்துள்ளதையும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தனது மூத்த மகளை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாலையே, கணவரை கொன்றதாக நவ்ஷீன் பேகம் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நவ்ஷீன் பேகத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவியதாக இருந்ததாக கூறப்படும் சுனிலை போலீசார் தேடி வருகின்றனர்.