அம்மா.. அப்பா ஊருக்கு வாறாரா!. தந்தை இறந்தது கூட தெரியாமல் தாயிடம் கேட்கும் மகன்!. கண்ணீர் விட்டு அழும் தாய்!.

அம்மா.. அப்பா ஊருக்கு வாறாரா!. தந்தை இறந்தது கூட தெரியாமல் தாயிடம் கேட்கும் மகன்!. கண்ணீர் விட்டு அழும் தாய்!.



wife-crying-for-his-husband-death

சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சடலத்தை பெறமுடியாமல் இந்தியாவில் உள்ள குடும்பத்தார் தவித்து வருகிறார்கள்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் இர்பான் என்பவருக்கு, நர்கீஸ் என்ற மனைவியும்  5 வயதில் சோகில் என்ற மகனும் இருக்கின்றனர்.

இர்பான் குடும்ப வறுமை காரணமாக  இரு மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் 11-ஆம் தேதி  மின்சாரம் தாக்கி இர்பான் சவுதி அரேபியாவிலே உயிரிழந்துள்ளார்.

அவர் இறந்து பத்து நாட்கள் ஆகியும் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாமல் அவரது குடும்பம் மற்றும் நர்கீஸ் 5 வயது மகனுடன் தவித்து வருகிறார்கள். இதுபற்றி  நர்கீஸ் கூறுகையில், தன்னுடைய அப்பா இறந்துவிட்டதை கூட உணரமுடியாமல், அம்மா அப்பா இப்போ நம்ம ஊருக்கு வருகிறாரா என கேட்கிறான் என்று கண்ணீர் மல்க கூறுகிறார் .