ஏன் நாளை 9 நிமிடம் விளக்கேற்ற வேண்டும் தெரியுமா?
ஏன் நாளை 9 நிமிடம் விளக்கேற்ற வேண்டும் தெரியுமா?
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி இந்திய பிரதமர் நாளை இரவு 9 முதல் 9:09 வரை மின்விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு, டார்ச் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு காரணம் அகல் விளக்குகளை வாமன துவாதசியான நாளை ஏற்றுவது நல்லது என புராணம் கூறுகிறது.
இந்ந நாளில் செயற்கையான மின்விளக்குகளை அணைத்து விட்டு இயற்கையான அகல்விளக்கை ஏற்றும் போது கொரோனா வைரஸ் போன்ற தீய சக்திகள் ஒழியும் என நம்பப்படுகிறது.