அய்யோ.... என் புள்ள! ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன்! அலறி துடித்த தாய்.... காப்பாற்ற முயன்றும் முடியல! சங்கிலியை இழுத்தும் நிற்காத ரயில்.....பதைபதைக்கும் வீடியோ!!!
மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி அருகே ஓடும் ரயிலில் இருந்து சிறுவன் ஒருவர் தவறி விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு பெண் கதறி அழுவது மற்றும் அருகிலிருந்த பயணிகள் அவரை சமாதானப்படுத்த முயல்வதும் பதிவாகியுள்ளது.
ராணிநகர் அருகே நடந்ததாக தகவல்
தகவலின்படி, ராணிநகர் ரயில் நிலையத்தை கடந்த சில நிமிடங்களிலேயே இந்த ரயில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறுவன் தவறி விழுந்ததும் பயணிகள் பதற்றத்தில் அவசர சங்கிலியை இழுத்ததாகவும், அதற்குப் பிறகும் ரயில் உடனடியாக நிற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவசர உதவி இல்லை என்ற பயணிகள் குற்றச்சாட்டு
இதையடுத்து, சிலர் ரயில்வே உதவி எண்களை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகும் உதவிக்காக யாரும் வராததால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அய்யோ... பாவம்! என்னா பாடு படுத்துற.... நடுரோட்டில் காதலனை ஆக்ரோஷமாக தாக்கிய காதலி! பகீர் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் விவாதம்
இந்த வைரல் வீடியோ வெளியாகியதும், ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஒரு தரப்பு அலட்சியமே காரணம் என குற்றம்சாட்ட, மற்றொரு தரப்பு தேவையில்லாமல் சங்கிலி இழுக்கும் பழக்கம் காரணமாக அவசர சூழலில் தாமதம் ஏற்படுகிறது என கூறுகிறது.
சம்பவம் நடந்த திகதி அல்லது சிறுவனின் தற்போதைய நிலை குறித்து ரயில்வே தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
🚨Train Tragedy: Passengers pull Emergency chain after boy falls off, But Train won’t stop.
REALITY : Absolute Negligence Noticed on the jalpaiguri ramnagar route!
A boy fell from a moving train with all the luggage.
When a female passenger screamed, Other Travelers pulled… pic.twitter.com/ayEVuGiEub
— Ramesh Tiwari (@rameshofficial0) April 26, 2026