திருமணமான மறுநாளே குழந்தை பிறந்த அதிசயம்.. உறவினர்களுக்கு பேரதிர்ச்சி.!



uttar pradesh marriage women delivering baby in 2 days

உத்திர பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆன மறுநாளே குழந்தை பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 

உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் இளம்பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் கலந்த அக்டோபர் மாதத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. 

இவர்களுக்கு கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் சொந்த பந்தங்கள் நிறைய கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், திருமணமான மறுநாளே அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பெற்றெடுத்து இருக்கிறார். இது மாப்பிள்ளை வீட்டினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Uttar pradesh

எப்படி திருமணமான இரண்டே நாளில் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு பெண் வீட்டினர் விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது, இவர்களுக்கு கடந்த மே மாதமே திருமணம் முடிவாகிவிட்டதாகவும், இதனால் இவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர் என்றும் இதன் மூலம்தான் கரு உருவாகியது என்றும் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: பூனைக்காக உயிரையே கொடுத்த பெண்மணி.! 3 நாட்கள் பிணத்துடன் இருந்த சம்பவம்.!

ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் இதனை ஏற்க மறுக்கின்றனர். இரு குடும்பத்தினர் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: காதலியை கொன்று, மொட்டை போட்ட காதலனின் விசித்திரமான செயல்.! கங்கையில் நீராடிய அதிர்ச்சி.!