பள்ளியில் வழங்கப்பட்ட பால் குடித்த 26 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி.!

பள்ளியில் வழங்கப்பட்ட பால் குடித்த 26 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி.!



Uttar Pradesh Ghaziabad 26 Students Admit Hospital 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத், பிரேம் நகர் காலனி பகுதியல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இன்று மதியம் உணவு பரிமாறப்பட்ட நிலையில், பாலும் குடிக்க வழங்கப்பட்டுள்ளது. பால் குடித்த 26 சிறார்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி இருக்கின்றனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மருத்துவமனையில் சிறார்கள் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர்.