ஸ்கூல் டாப்பராக வர முடியவில்லை - 572 மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை.!



UP Fatehpur School Student Died 

 

கற்றலில் அவள் கெட்டிக்காரி:

உத்திப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாதேபுர் மாவட்டம், ஜாபர்கான்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது பள்ளி மாணவி சாக்ஷி சிங் (வயது 16). இவர் அங்குள்ள கிருஷ்ணா இன்டர் கல்லூரியில் 10 ம் வகுப்பு பயின்று வந்துள்ள. அம்மாநில உயர்நிலைப்பள்ளி தேர்வையும் எழுதி இருக்கிறார். நன்கு படிக்கும் திறன் கொண்ட இவர், நல்ல மதிப்பெண்ணை நோக்கி காத்திருந்துள்ளார். 

பள்ளியிலேயே நான்காவது தலைசிறந்த மாணவி:

இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சாக்ஷி 600 க்கு 572 (95.3%) மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் அவரின் பள்ளியிலேயே அதிக மதிப்பெண் பெற்றவர்களில் நான்காவது இடத்தை பெற்றுள்ளார். தான் எப்படியேனும் பள்ளியின் முதல் மாணவியாக வருவேன் என காத்திருந்த சிறுமிக்கு மதிப்பெண் குறைந்தது அதிர்ச்சியை தந்துள்ளது. 

வருத்தத்தில் விபரீத முடிவு:

இதனால் ஏப்ரல் 20 ம் தேதி முடிவுகள் வெளியான நாளில் இருந்து வருத்தமாக காணப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், அவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் அருகேயுள்ள வேப்ப மரத்தில் அவரின் சடலம் மீட்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.