கதறி அழுத தந்தை! மனமிறங்காத மருத்துவர்கள்! நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!
கதறி அழுத தந்தை! மனமிறங்காத மருத்துவர்கள்! நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!
மருத்துவர்கள் போராட்டத்தால் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 11 ஆம் தேதி அப்ஜித் மாலிக் என்பவர் மனைவிக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது, குழந்தை பிறந்து இரண்டே நாட்களில் உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தினால் மருத்துவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கும் படி பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்
அதன்படி பிறந்த குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு அப்ஜித் மாலிக் மற்றும் அவரது மனைவி குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் அஜித் மாலிக்கின் குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்துவிட்டனர். இதனால் குழந்தை பரிதாபமாக இறந்தது.
மருத்துவர்கள் மற்றும் மாநில சுகாதாரத் துறையின் அலட்சியமே தனது குழந்தையின் இறப்புக்கு காரணம் என கூறி அப்ஜித் மாலிக் மற்றும் அவரது மனைவி இறந்த குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு கண்ணீர் சிந்திய காட்சி பார்ப்பவர்களை நெஞ்சத்தை சோகத்தில் மூழ்கடித்தது.