தலைவனுக்கு தில்ல பாத்தியா.. காரில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே சென்ற இளைஞர்கள்.. தட்டி தூக்கிய போலீஸ்..!



Tilla Pathiya to the leader.. The youths were bursting firecrackers in the car.. The police knocked them down..!

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரத்தில் ஃபோர்டு காரின் மேற்குறையில் பட்டாசுகளை வைத்து வெடித்துக்கொண்டு காரை இயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த செயலானது காரில் பயணித்தவர்களின் உயிருக்கு மட்டுமின்றி சாலையில் சென்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்தமையால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Hariyao

இதனையடுத்து இளைஞர்கள் பயணம் செய்த காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் பட்டாசுகளை வெடித்து கொண்டே சென்ற இளைஞர்கள் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.