அறிவுரை சொன்ன பெற்றோர்... தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்.! காவல்துறை தீவிர விசாரணை.!



the-son-who-brutally-killed-his-mother-and-father-what

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே  மகனுக்கு அறிவுரை கூறிய தந்தை மற்றும் தாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பிச் சென்ற மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பேடராயனபுரா அருகே சவுதேமண்டி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (61). இவரது மனைவி சாந்தா (60). பாஸ்கர் தனியார் ஹோட்டல் ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சாந்தா மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர். இவர்களுக்கு சச்சின் மற்றும் சரத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

Indiaஇவர்களில் சச்சின் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். சரத் அவரது பெற்றோர் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சரத் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவம் நடந்த தினத்தன்று  பாஸ்கர் தனது மகனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.  இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சரத் இரும்பு கம்பியால் தனது தந்தையை பலமாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த தாயையும் கடுமையாக தாக்கி இருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய் மற்றும் தந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். பின்னர் வீட்டை பூட்டி விட்டு சரத் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

Indiaமறுநாள் காலை சச்சின் தனது தாய் தந்தையுடன் பேசுவதற்காக செல்போனில் அழைத்திருக்கிறார் அவர்களிடம் இருந்து பதில் எதுவும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து பாஸ்கர் வீட்டிற்கு சென்று  காவல்துறையினர் சோதனை இட்டபோது பாஸ்கர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய சரத்தை காவல்துறை தேடி வருகிறது.