காதலுக்கு இடையூறாக இருந்த தாய்.. காதலனுடன் சேர்ந்து மகள் செய்த பகிர் சம்பவம்..!

காதலுக்கு இடையூறாக இருந்த தாய்.. காதலனுடன் சேர்ந்து மகள் செய்த பகிர் சம்பவம்..!


the-mother-who-was-an-obstacle-to-love-the-incident-tha

மகாராஷ்டிராவில் காதலுக்கு இடையூறாக இருந்த தாயை கழுத்தை நெரித்துக் கொன்ற மகள் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சந்திர காந்த் அத்ரம் என்பவர் கடந்த 2000_ஆம் வருடம் ஜூனில் நக்சல் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கொலையான ஐந்து நாட்களுக்கு பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நிர்மலாவுக்கு, ஊர்மிளா அத்ரம் பிறந்தார். இப்போது ஊர்மிளா அத்ரம் 22 வயது பெண்ணாக உள்ளார். கணவரை இழந்ததால், மாநில காவல் துறையில் நிர்மலாவுக்கு சிறப்பு காவல் அதிகாரி வேலை வழங்கப்பட்டது. இந்நிலையில் பாம்ராகரில் இருக்கும் கல்லூரியில் கலைப்பிரிவில் பட்டம்  பெற்ற ஊர்மிளா, கடந்த நான்கு வருடங்களாக காய்கறி விற்பனையாளரான ரூபேஷ்  யெங்கந்தல்வார் என்பவரை காதலித்து வந்தார். அவரை தனக்கு திருமணம் செய்து  வைக்குமாறு தாய் நிர்மலாவிடம் ஊர்மிளா வற்புறுத்தி வந்தார்.

இவர்களது காதலுக்கு. நிர்மலா எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், தனது தாயிடம் ஊர்மிளாக சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மகளுக்கும் தாய்க்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் காதலுக்கு இடையூறாக இருக்கும் தாயை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய ஊர்மிளா திட்டம் போட்டார். அதன்படி ஊர்மிளாவும், ரூபேசும் வீட்டில் இருந்த நிர்மலாவை துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். அதன்பின் அஹேரியில் இருக்கும் தனது அறைக்கு ரூபேஷ் சென்றார். அவர் தனது அறை நண்பனான நிலேஷிடம், ஊர்மிளாவை அழைத்து வருமாறு கூறினார்.

எனவே, ஊர்மிளாவை தனது பைக்கில் நிலேஷ் அழைத்து வந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த அஹேரி காவலர் யஷ்வந்த் குட்டே, அவர்களை வழிமறித்து விசாரணை செய்தார். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக உளறியதால் சந்தேசகமடைந்த காவலர், தனது உயரதிகாரிக்கு தகவல் அளித்தார். அவர்கள் ஊர்மிளாவின் வீட்டிற்கு இருவரையும் அழைத்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த நிர்மலாவை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஊர்மிளாவிடம் விசாரித்தபோது, தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். உடனே நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை செய்த போது முழு விபரமும் தெரியவந்தது. தானும், காதலனும் சேர்ந்து கொலை செய்ததை ஊர்மிளா ஒப்புக் கொண்டார். அதையடுத்து கொலையாளியான காதலன் ரூபேஷ், காதலி ஊர்மிளா, ரூபேஷின் நண்பன் நிலேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.