நல்லி எலும்பால் நின்றுபோன திருமணம்.‌. கறார் மாப்பிள்ளையால் நடந்த கலவரம்.!

நல்லி எலும்பால் நின்றுபோன திருமணம்.‌. கறார் மாப்பிள்ளையால் நடந்த கலவரம்.!



Telungana groom stopped marriage for nalli elumbu

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் வசித்து வரும் மணப்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சார்ந்த மணமகனுக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் பெண்வீட்டார் சார்பாக உணவு பரிமாறப்பட்ட போது, அதில் நல்லி எலும்பு இல்லை என்று மாப்பிள்ளை குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்.

telungana

இதனால் இருதரப்பும் வாக்குவாதம் செய்த நிலையில், அங்கு நடைபெறவிருந்த திருமணம் நின்றது. இது தொடர்பான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.