பள்ளியில் பயங்கர தலைவலியால் மயங்கி விழுந்த சிறுவன்! திடீரென வந்த மூளைச்சாவு! மர்மமாக உயிரிழந்தது எப்படி..? கதறும் பெற்றோர்கள்....
சமீப காலங்களில் பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ உதவிகள் பற்றிய கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில், தெலுங்கானாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சிறுவர்களின் உடல்நிலை மாற்றங்களுக்கு பள்ளிகள் எப்படியான முன்னெச்சரிக்கைகள் எடுத்துக்கொள்கின்றன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
பள்ளியில் திடீர் உடல்நிலை பாதிப்பு
தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவில் உள்ள நயீம் நகர் தேஜஸ்வி உயர்நிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவர் சர்ஜீத் பிரேம் திடீரென தலைவலி காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பள்ளி ஊழியர்கள் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: உனக்கு மேஜிக் காட்டுறேன் என்கூட வா! 8 வயது சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்ற ஆசிரியர்! அடுத்து நடந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்!
மருத்துவமனை தகவல் அதிர்ச்சி
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சர்ஜீத் பிரேம் ஏற்கனவே மூளைச் சாவு அடைந்த நிலையில் வருவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காட்சிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் கோபம் மற்றும் போராட்டம்
சம்பவத்தின் பின்னர், பள்ளி வெளியே கூடிவந்த பெற்றோர் — எந்த முன்னறிகுறியும் இல்லாத ஆரோக்கியமான குழந்தை இவ்வாறு இறந்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து உடனடி நடவடிக்கை அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.
హన్మకొండ నగరంలో తీవ్ర విషాదం
— Telugu Scribe (@TeluguScribe) October 23, 2025
తేజస్వి హై స్కూల్లో 4వ తరగతి విద్యార్థి అనుమానస్పద మృతి
హన్మకొండ – నయీమ్ నగర్ ప్రాంతంలో ఉన్న తేజస్వి స్కూల్లో అనుమాస్పద స్థితిలో మృతి చెందిన సర్జీత్ ప్రేమ్ అనే నాలుగవ తరగతి విద్యార్థి
తల్లిదండ్రులకు తెలియకుండా చికిత్స నిమిత్తం ప్రైవేటు… pic.twitter.com/L6CElEkBvb
இதையும் படிங்க: பள்ளிக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன்! திடீரென மயங்கி விழுந்த நொடியில் மரணம்! விழுப்புரத்தில் பெரும் சோகம்...