குடியிருப்பில் திடீரென பிடித்த தீ: சுதாரிப்புடன் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய காவலர்.! குவியும் பாராட்டுக்கள்.!!



Telangana Cop Life Saved 


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அறிந்ததும் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்த நிலையில், சிலர் வீட்டிற்குள் சிக்கி இருப்பது தெரியவந்தது. 

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த காவலர் சரவண குமார் என்பவர், துரிதமாக செயல்பட்டு வீட்டில் சிக்கி இருந்தோரை மீட்டனர். காவலரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.