மாமியாருடன் வீட்டை விட்டு ஓடிய மருமகன்.... மாமனார் கண்ணீருடன் போலீசில் புகார்...!!



Son-in-law ran away from home with mother-in-law.

ராஜஸ்தான் மாநிலத்தில் மாமியாருடன் வீட்டை விட்டு ஓடி இருக்கிறார் மருமகன். மாமனார் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிரோகி மாவட்டத்தில் சியாகாரா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ். இவருக்கு மூன்று மகள்கள்.  மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். 
நாராயணன் ஜோகி அடிக்கடி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மருமகனுக்கும், மாமியாருக்கும் இடையே கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இருவரும் குடித்தனம் நடத்த முடிவு செய்து வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து நாராயணன் ஜோகியின் மாமனார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு மகளும் மருமகனும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார்கள்.  மருமகன் நாராயணன் ஜோகி டிசம்பர் 30-ஆம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நானும் மருமகனும் நிறைய மதுபானம் குடித்துவிட்டு தூங்கினோம்.  

அடுத்த நாள் எழுந்தபோது,  என் மனைவியையும் மருமகனையும் காணவில்லை. பல இடங்களில் தேடினோம். அதன் பிறகு தான் இருவரும் ஓடி விட்டார்கள் என்பது தெரிய வந்தது. என் மனைவியை மயக்கி மருமகன் அழைத்துச் சென்று விட்டார் என்று ரமேஷ் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். காவல்துறையினர், வீட்டை விட்டு ஓடிய மாமியார், மருமகன் இருவரையும் தேடிவருகின்றனர்.