பெற்றோரை கல்லால் அடித்து கொலை செய்த கொடூர மகன்!

பெற்றோரை கல்லால் அடித்து கொலை செய்த கொடூர மகன்!



Son brutally killed parents in uttarpradesh

உத்திரவேச மாநிலத்தில் வயது முதிர்ந்த பெற்றோரை கல்லால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் பருக்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் மனோஜ் பால். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். இதில் இவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் அதே வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்துள்ளனர்.

UttarPradesh

இந்த நிலையில் நேற்று இரவு மனோஜ் பால் மாடியில் வசிக்கும் தனது பெற்றோர்கள் தொங்கப் போவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து இறங்கி வந்த அவர், தனது மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் தனது பெற்றோரை கொன்று விட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மனோஜ் பால் தனது பெற்றோரை கல்லால் அடித்துக் கொன்றது தெரிய வந்தது.

UttarPradesh

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனே பெற்றோரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.