அதிவேகத்தில் அசால்ட் பயணம்; கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்.!

அதிவேகத்தில் அசால்ட் பயணம்; கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்.!



  Pondicherry Tamilnadu Area Car Accident 3 Died 8 Injured 

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு பகுதியான கோட்டக்குப்பம், கீழ்புத்துபட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மீனா கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தை சேர்ந்த மீனவ பெண்கள், புதுச்சேரிக்கு சென்று மீன்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருவது வழக்கம். 

இந்நிலையில், இன்று காலை லட்சுமி (வயது 45), கோவிந்தம்மாள் (வயது 50), கமல், கெங்கையம்மாள், பிரேமா உட்பட 6 பேர் ஷேர் ஆட்டோவுக்கு காத்திருந்துள்ளனர். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக பயணம் செய்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பெண்களின் மீது புகுந்தது. 

Accident news

இந்த சம்பவத்தில் லட்சுமி, கோவிந்தம்மாள் ஆகிய 2 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கெங்கையம்மாள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். எஞ்சியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காரில் பயணம் செய்த விக்னேஸ்வரன், கெளதம், சேது உட்பட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.