மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை., முதலாளியின் பதறவைக்கும் செயல்.. அதிர்ச்சியாக்கும் சம்பவம்.!

மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை., முதலாளியின் பதறவைக்கும் செயல்.. அதிர்ச்சியாக்கும் சம்பவம்.!



police-investigation-4-years-after-a-rape-case

பெண் ஊழியர் தனது முதலாளி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகளுக்கு பின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் 2018 ஆம் ஆண்டு 38 வயதான பெண்மணி தனியார் சுகாதார நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவர் பணியாற்றிய நிறுவன உரிமையாளருடன் நட்பாக பழகியுள்ளார்.

இந்த நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்திய நிறுவன உரிமையாளர், அந்த பெண்ணிற்கு தெரியாமல் குளிர்பானத்தில் போதைபொருள் கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக மொஹாலி காவல் கண்காணிப்பாளரிடம் பெண் புகார் அளித்துள்ளார். 

punjab

மேலும், அதனை புகைப்படங்களாக எடுத்து வைத்து தன்னை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் புகார் தெரிவித்த நிலையில், காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணையை துவக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், நிறுவன உரிமையாளர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 376, 408, 381 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், ஆதாரங்களை சேகரித்து பதிவு செய்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டதாகவும், விசாரணை முடிந்த நிலையில் சட்ட ஆலோசனை எடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைமறவாகி இருக்கும் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.