காதலிக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து காதலியின் சம்மதத்துடன் சிறுமியை சீரழித்த கொடூரன்.! உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 11 வயது சிறுமி..!
காதலிக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து காதலியின் சம்மதத்துடன் சிறுமியை சீரழித்த கொடூரன்.! உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 11 வயது சிறுமி..!
மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் 11 வயது சிறுமி, தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். 22 வயது நிரம்பிய அந்த உறவுக்கார பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த வாலிபர் அடிக்கடி காதலி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
அந்த வாலிபர் அடிக்கடி காதலியின் வீட்டிற்கு வந்து சென்றபோது 11 வயது சிறுமியை காதலியின் வீட்டில் பார்த்துவிட்டு, அந்த சிறுமி மீதும் ஆசை கொண்டுள்ளார். இதனையடுத்து தனது காதலியின் சம்மதத்துடன் அந்த சிறுமியை அடைய வேண்டும் என பிளான் போட்டு காதலியை சம்மதிக்கவைக்க காதலிக்கு ஒரு புதிய செல்போன் வாங்கி கொடுத்ததோடு கொஞ்சம் பணமும் கொடுத்துள்ளார். இதனையடுத்து 11 வயது சிறுமியை அடைய வேண்டும் என்ற தனது ஆசையை காதலியிடம் கூறி உள்ளார்.
காதலன் தனக்கு செல்போன் மற்றும் பணம் கொடுத்த சந்தோஷத்தில் அதற்கு காதலியும் சம்மதித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை வாலிபருடன் தனியாக தங்க வைக்க ஏற்பாடும் செய்தார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே வீட்டிலேயே 11 வயது சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அதிக எதிர்ப்பு தெரிவிக்கவே சிறுமியை தாக்கி, அவரது அந்தரங்க பகுதிகளில் காயம் ஏற்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுமியை தூக்கி கொண்டுபோய் யாருமில்லாத பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமி உயிருக்கு போராடி கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.