என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட தேவை இல்லை..!! மருத்துவர்கள் குழு தகவல்.. முழு விவரம் இதோ..

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்திய நிபுணர்களின் அறிக்கையின்படி, இயற்கை தொற்றுநோய்க்குப் பிறகு தடுப்பூசி நன்மை பயக்கும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. "கோவிட் -19 நோய்த்தொற்றை ஆவணப்படுத்தியவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை. இயற்கை தொற்றுநோய்க்குப் பிறகு தடுப்பூசி நன்மை பயக்கும் என்பதற்கான ஆதாரங்களை உருவாக்கிய பின்னர் இந்த நபர்களுக்கு தடுப்பூசி போடலாம்" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
அதேநேரம் தடுப்பூசி செலுத்தும் முறைகளில் மாற்றம் கொண்டுவரலாம் எனவும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கலாம் எனவும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் இரண்டாவது டோஸ் போடுவதற்கான கால அவகாசத்தை குறைக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.