அத்துமீறி நுழைவு! இந்திய எல்லைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக நடுரோட்டில் வாலிபரை தரதரவென இழுத்து சென்ற நேபாள போலீஸ்! சர்வதேச விதிமீறல்.... வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!
இந்தியா-நேபாள எல்லையான சோனாலி-பெல்ஹியா பகுதியில் நேபாள போலீசார் இந்திய எல்லைக்குள் நுழைந்து வாலிபர் ஒருவரை இழுத்துச் சென்ற வீடியோ பரவி வருகிறது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எல்லை தாண்டி துரத்தல்
தகவலின்படி, நேபாள போலீசாரின் பிடியில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பித்து இந்திய எல்லைக்குள் ஓடிவந்துள்ளார். அவரை விரட்டி வந்த இரண்டு போலீசார் சர்வதேச எல்லையை மீறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு வாலிபரை மீண்டும் பிடித்த அவர்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாலையில் தரதரவென இழுத்துச் சென்றனர்.
இந்திய போலீசார் முன்னிலையிலும் நடவடிக்கை
சம்பவ இடத்திற்கு அருகிலேயே இந்திய போலீசார் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வாலிபரை எழுந்து நிற்க வைத்த போதிலும், நேபாள போலீசார் அவரை விடாமல் வலுக்கட்டாயமாக தங்கள் நாட்டுக்குள் அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய viral video சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: நடுத்தெருவில் குழந்தைகள் விளையாடும் போது நடந்த பயங்கரம்! அலறி அடித்து சிதறி ஓடும் குழந்தைகள்... கொலை நடுங்க வைக்கும் வீடியோ..!!
சர்வதேச விதிமீறல் குற்றச்சாட்டு
இதுகுறித்து சோனாலி காவல் ஆய்வாளர் மகேந்திர மிஸ்ரா கூறுகையில், பெல்ஹியா காவல் நிலையத்திலிருந்து தப்பிய குற்றவாளியைத் துரத்திச் சென்றதே இந்த நிலைக்கு காரணம் என தெரிவித்தார். இருப்பினும், ஒரு நாட்டின் போலீசார் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து நடவடிக்கை எடுப்பது human rights violation என்றும், இறையாண்மை மீறல் என்றும் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சுமார் 84 கி.மீ நீளமுள்ள இந்த எல்லைப் பகுதி சமீபத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு முக்கிய பாதையாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடந்த இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
इंडो-नेपाल अंतरराष्ट्रीय सीमा के सोनौली-बेलहिया बॉर्डर पर नेपाली पुलिस के जवान भारतीय सीमा में प्रवेश कर एक आरोपी युवक को सरेआम सड़क पर घसीटते हुए नेपाल की ओर ले गए। प्रत्यक्षदर्शियों के अनुसार, आरोपी युवक नेपाल पुलिस की हिरासत से भागकर भारतीय सीमा में आ गया था। #indonepal pic.twitter.com/tt6Kzc7SWj
— Pawan Kumar Sharma (@pawanks1997) April 22, 2026