கிளப் ஹவுசில் பெண்கள் குறித்து அவதூறு பேச்சு.. 3 இளைஞர்கள் அதிரடி கைது.!

கிளப் ஹவுசில் பெண்கள் குறித்து அவதூறு பேச்சு.. 3 இளைஞர்கள் அதிரடி கைது.!



Mumbai Woman Complaint Against 3 Man Abusing Statement Muslim Girls in Clubhouse App

இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக குழுவாக சேர்ந்து அரட்டையடிக்க பல்வேறு செயலிகள் உள்ள நிலையில், சமீபத்தில் இளம் வயதினரிடையே அறிமுகமான செயலி கிளப் ஹவுஸ். இந்த கிளப் ஹவுஸ் செயலிகளில் பெரும்பாலும் பெண்ணியம் தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

மேலும், புதிய நபரிடம் பேச வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், உண்மையாக பெண்ணியம் பேசக்கூடியவர்கள் சில நல்ல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இங்கும் போலி போராளிகளுக்கு பஞ்சமில்லை என்பதை போல, பல அவதூறான கருத்துக்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 

Mumbai

இந்த நிலையில், மும்பையை சார்ந்த பெண்மணி ஒருவர், மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கிளப் ஹவுசில் 3 இளைஞர்கள் முஸ்லீம் பெண்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதுதொடர்பான விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணைக்கு பின்னர், பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய ஆகாஷ், ஜெஷ்ணவ் மற்றும் யாஷ் பிரஷார் ஆகிய 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.