ஹிஜாப் அணிந்த மாணவிகள், கல்லூரிக்குள் நுழைய தடை.! மும்பையில் உண்டான பரபரப்பு.! 

ஹிஜாப் அணிந்த மாணவிகள், கல்லூரிக்குள் நுழைய தடை.! மும்பையில் உண்டான பரபரப்பு.! 



mumbai college women not allowed into campus who wearing hijab

மும்பை கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளை வேறுபடுத்தி காட்டும் விதமாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து நுழைவது தவறு என்று ஒரு சில கல்லூரிகள் அதற்கு தடை விதித்தன. இது தங்களது மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக கூறி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

Mumbai

இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் அமைந்துள்ள  என்.ஜி ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தா கல்லூரியில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழைவதை தடுக்கின்ற ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. 

Mumbai

இந்த வீடியோ குறித்து கல்லூரி செக்யூரிட்டியிடம் கேட்டபோது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தால் அதை அகற்றச் சொல்லி அறிவுறுத்தக் கூறி கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.