9 வயது சிறுவனை ஓரினசேர்கைக்கு உட்படுத்தி பலாத்காரம் செய்ய முயற்சி; துறவிக்கு 20 ஆண்டுகள் சிறை.! நீதிமன்றம் அதிரடி.! 

9 வயது சிறுவனை ஓரினசேர்கைக்கு உட்படுத்தி பலாத்காரம் செய்ய முயற்சி; துறவிக்கு 20 ஆண்டுகள் சிறை.! நீதிமன்றம் அதிரடி.! 



MP Indore Saint Jail 20 Years for Abuse Minor Boy 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியை சேர்ந்த துறவி பரமாத்மா தாஸ் (வயது 53). இவர் கடந்த நவம்பர் 2022 அன்று 9 வயது சிறுவனை இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்தினார். 

சிறுவனை கொலை செய்யவும் முயற்சி நடந்த நிலையில், சிறுவன் அங்கிருந்து தப்பிச்சென்று தாய்-தந்தையிடம் விபரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவ்விசயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் துறவியை கைது செய்தனர். இவ்வழக்கு இந்தூர் சிறார் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இறுதி விசாரணை நாய்த்தும் நிறைவுபெற்று, குற்றவாளி பரமாத்மா தாஸுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் மற்றும் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சம் இழப்பீடு மாநில அரசு சார்பில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.