BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
குரங்கு வீசிய பணமழை! இளையரின் 500 ரூ. நோட்டு கட்டுகளை எடுத்து மழை மாதிரி வீசிய அதிசய காட்சி! வைரல் வீடியோ....
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிசயமான குரங்கு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் பேச்சுப்பொருளாகியுள்ளது. தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வு, அங்கு இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குரங்கு பணம் வீசிய அதிசயம்
பிரயாக்ராஜ் தாலுகா அலுவலகத்திற்கு தனது நிலத்தை பதிவு செய்ய வந்த ஒரு இளைஞர், தனது பைக்கில் உள்ள பிளாஸ்டிக் பையில் பெரிய தொகையை வைத்திருந்தார். சிறிது நேரத்தில், அருகில் இருந்த ஒரு குரங்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பைக்கின் டிக்கியைத் திறந்து பையை எடுத்து ஓடிவிட்டது.
அந்த காட்சியை பார்த்த மக்கள் குரங்கை துரத்தினர். ஆனால், வேகமாக ஓடிய குரங்கு அருகிலிருந்த ஒரு உயரமான மரத்தில் ஏறி, பிளாஸ்டிக் பையை கிழித்து அதன் உள்ளே இருந்த 500 ரூபாய் நோட்டுகளின் கட்டுகளை வெளியில் எடுத்து கீழே வீசத் தொடங்கியது.
பண மழையால் பரபரப்பு
மரத்தின் மேலிருந்து குரங்கு நோட்டுகளை வீசியதும், காற்றில் பறந்த பணம் மழை போல விழ, அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து அவற்றை சேகரிக்க துடித்தனர். அலுவலகம் முழுவதும் பரபரப்பாகி, சிலர் அந்த காட்சியை மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அந்த வீடியோ “குரங்கு பண மழை” என்ற தலைப்பில் வேகமாக வைரலானது.
மக்களின் நேர்மையான செயல்
இச்சம்பவத்தில் குறிப்பிடத்தக்கது, அந்த இடத்தில் இருந்த மக்கள் நேர்மையுடன் நடந்துகொண்டு சேகரித்த நோட்டுகளை சம்பந்தப்பட்ட இளைஞரிடம் திருப்பி வழங்கினர். தன்னுடைய பணம் மீண்டும் கிடைத்ததால், அந்த இளைஞர் நிம்மதியடைந்தார்.
இந்த வியத்தகு நிகழ்வு தற்போது பிரயாக்ராஜ் மாவட்டம் முழுவதும் பேசுபொருளாகி, குரங்கின் செயல் அனைவரையும் சிரிப்பும் ஆச்சரியமும் கலந்த எதிர்வினை தெரிவிக்க வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளின் நுண்ணுணர்வையும் வெளிப்படுத்துகின்றன.
इंसानों के लिए ‘अर्थ’, बंदर के लिए ‘व्यर्थ’
प्रयागराज के सोरांव तहसील में सोमवार को अचानक एक पेड़ से नोटें बरसने लगीं, जब लोगों ने ऊपर देखा तो पाया कि एक बंदर 500 रुपए के नोटों की हाथ में लेकर गड्डी चबा रहा है और शोर मचाने पर वो नोटों की बरसात करके भाग निकला! #Monkey… pic.twitter.com/bJNfnFNuGC
— ABP News (@ABPNews) October 14, 2025
இதையும் படிங்க: என்னா ஆட்டம் ஆடுது! கயிற்றில் தொங்கியபடியே தலையை தூக்கி மரண பயத்தை காட்டிய கருநாகம்! திகில் வீடியோ...