சொந்த மகளை நடுக்காட்டில் வைத்து சீரழித்து கொன்ற பயங்கரம்.. தந்தை நடத்திய பேரதிர்ச்சி வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!

சொந்த மகளை நடுக்காட்டில் வைத்து சீரழித்து கொன்ற பயங்கரம்.. தந்தை நடத்திய பேரதிர்ச்சி வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!



man-kills-14year-old-daughter-rapes-her-corpse

மத்திய பிரதேசத்தில், மகளை கொன்று இறந்த மகளின் உடலுடன் பாலியல் உறவு கொண்ட கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டம் ஜைடா டோங்கர் கிராமத்தை சேர்ந்தவர் திலிப் சிங் பிஹல் (40). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி 14 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், திலிப் சிங் தனது மகளை காணவில்லை என பஜ்ரங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை அவரது தந்தையான திலிப்புடன் சென்றபோது கடைசியாக பார்த்ததாக அந்த கிராம மக்கள் பலரும் தெரிவித்தனர்.

இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையான திலிப்பிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மகளை திலிப்பே கொன்று, பின்னர் உயிரிழந்த மகளின் உடலுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் திலிப்பை கைது செய்தனர்.

திலிப்பிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 14 வயது மகள் தனது பேச்சை கேட்காமல் இருந்தார் எனவும், இதனால் தனது மகளை அழைத்துக்கொண்டு திலிப் நேற்று இரவு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய திலிப் முயற்சித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி இதுபற்றி உறவினர்களிடம் கூறிவிடுவேன் என்று தந்தையை மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த திலிப் காட்டிற்குள் கிடந்த கட்டையை கொண்டு தனது மகளை அடித்து கொன்றுள்ளான். உயிரிழந்த பின்னர் தனது மகளின் உடலுடன் அந்த கொடூரன் பாலியல் உறவு வைத்துள்ளான்.

திலிப் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் வனப்பகுதிக்கு சென்று பிணமாக கிடந்த 14 வயது சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், திலிப் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.